காவலர் தேர்வு எழுத வந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்

மதுரையில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி காவலர் தேர்வு எழுத வந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள தனியார் கல்லூரி மையத்தில் பலர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த பிறகு வெளியே வந்தவர்களில் விஜயகாந்த் என்பவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்து வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தேர்வு எழுத வந்தவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போலீசார் பிடித்துச் சென்ற விஜயகாந்த் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு. வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது. புதூர் தல்லாகுளம் கூடல்புதூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் விஜயகாந்த் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கொண்டு விஜயகாந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version