பிம்ஸ் நோய் வதந்தி – சுகாதாரத் துறைச் செயலாளர் விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு, பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளிலும் கூட ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழைக் காலம் தொடங்கவுள்ளதால், கொரோனாவுடன், வைரஸ் காய்ச்சல்களும் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version