தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது

சர்வதேச வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.

தென்கொரிய தலைநகர் சியோலில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், அதிபரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.

இந்நிலையில், சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி வழங்கப்பட்டுள்ள விருதுத் தொகையான ஒரு கோடியே 42 லட்சம் ரூபாயை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக மோடி வழங்கியுள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் சாதனை விளக்க வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், இதனை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

விருது மற்றும் சான்றிதழை பெற்றக் கொண்ட பிரதமர் மோடி, இதையடுத்து நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்தினார்.

Exit mobile version