ஆசியான் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

ஒருங்கிணைந்த, வலிமையான, பொருளாதார வளமிக்க ஆசியான் நாடுகளின் நலனில் இந்தியாவின் நலனும் அடங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பாங்காக்கில் தென்கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டார். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பேசிய மோடி, கிழக்கு நோக்கிய இந்தியாவின் கொள்கை இந்தோ பசிபிக் நாடுகளையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது எனத் தெரிவித்தார். ஒருங்கிணைந்த, வலிமையான, பொருளாதார வளமிக்க ஆசியான் நாடுகளின் நலனில் இந்தியாவின் நலனும் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version