தாயிடம் ஆசி பெற இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

17வது மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், தனது தாயிடம் ஆசி பெற இன்று மாலை குஜராத்திற்கு செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நாளை காசிக்கு செல்ல உள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தன் மீது நம்பிக்கை வைத்து வெற்றியை பரிசு அளித்த மக்களுக்கு நன்றி சொல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மாபெரும் வெற்றிக்கு பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாநில பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version