பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

தேர்தல் முடிவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சதிஷ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரசிடம் ஆட்சியை பா.ஜ.க. பறிகொடுத்துள்ளது. அந்த மூன்று மாநிலங்களிலுள்ள 65 எம்.பி. தொகுதியில் 62 தொகுதிகளில் பா.ஜ.க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருந்தது. அதே போன்று தெலுங்கானாவிலும், மிசோரமிலும் ஒரு இடத்தில் மட்டுமே பா.ஜ.க. வென்றுள்ளது.

2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பிற்பகல் தொடங்கி மாலை வரை இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version