கேரள பாஜக தொண்டர்களுடன் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்

கேரளாவில் வரும் 6-ம் தேதி மாநில பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதலமைச்சராக உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வரும் 6ம் தேதி கேரள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

மேலும் அடுத்த மாதம் 27-ம் தேதி திரிச்சூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதனிடையே வரும் 31-ம் தேதி பாலக்காட்டில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் பிரசாரங்களில் ஈடுபட பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், கேரளாவில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

Exit mobile version