"விஜயலட்சுமியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்" – பிரதமர் மோடி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், விஜயலட்சுமியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமியின் மறைவால், ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது எனக் கூறியுள்ள அவர்,

அவரது தியாகம் குடும்பத்தை என்றும் வழிநடத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். விஜயலட்சுமியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version