முப்படை தளபதிகளுடன் 2-து முறையாக பிரதமர் மோடி ஆலோசனை

பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய விமானியை மீட்பது குறித்து பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடன் இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்தினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி அபிநந்தன் என்பவர் சிக்கியிருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. விமானி அபிநந்தனை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வசம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் டீ குடித்துக் கொண்டு பேசும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. அவரது நிலை குறித்து இந்திய தரப்பு தொடர்ந்து கவனித்து வருகிறது.

இந்த நிலையில், ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்து கொண்டார். விமானி அபிநந்தன் விரைவில் நாடு திரும்புவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version