வீரர்கள் மக்கள் பணியாளர்களாக தங்களை கருத வேண்டும் – இந்திய ராணுவ தலைவர் பிபின் ராவத் பேச்சு

உடலளவிலும் மனதளவிலும் இளம் வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் பிபின் ராவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இளம் வீரர்கள் உடலளவிலும் மனதளவிலும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் பணியாளர்களாக தங்களை கருதி, அதற்கேற்ப வீரர்கள் செயல்பட்டால் மட்டுமே, மக்கள் அவர்களை கண்டு பெருமிதம் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் இளம் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பையும் பிபின் ராவத் ஏற்றுக் கொண்டார்.

Exit mobile version