தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்போரூர் அருகே தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு பசுமை சூழலை பாழடிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Exit mobile version