திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பில் மரங்கள் நட்டு வைப்பு

திருச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பில் மரம் நடு விழா நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி காவல் நிலையத்தின் பின்புறத்தில், புதிதாக காவலர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கின் அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை மேம்படுத்தவும் மண்வளத்தை பாதுகாக்கவும் மரம் நடு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே துவக்கி வைத்தார். விழாவில், துவாக்குடி அரசுப்பள்ளி மாணவர்கள், 300 மரக்கன்றுகளை நட்டனர். இவ்விழாவில் மா, பலா, வேம்பு, நெல்லி, புங்கன் போன்ற பல வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version