அம்மாவின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான கல்வெட்டை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஜெயலலிதா 71வது பிறந்தநாளை யொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக, 191 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version