புகைப்பட கண்காட்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து புகைப்படங்கள்

மறைந்த பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி R.N. நாகராஜ ராவ் அவர்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்ற நடிகர்களின் புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஊட்டி பிலிம் பெஸ்டிவிவல் சொசைட்டி சார்பில் குறும்பட விழா, உதகையிலுள்ள பழமை வாய்ந்த அசம்பிளி திரையரங்கில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திரைப்படங்களில் பணியாற்றி, மறைந்த ஒளி புகைப்படக் கலைஞர் கலைமாமணி R.N. நாகராஜ ராவ் அவர்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரை R.N. நாகராஜ ராவ், அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. திரைக்குப் பின்னால் எனது தந்தை எடுத்த புகைப்படங்கள் என்றும் பொக்கிஷமாக உள்ளது என R.N. நாகராஜ ராவின் மகன் பிரேம்நாத் தெரிவித்தார். மேலும் இந்தப் புகைப்படங்கள் தங்களை பழைய காலத்துக்கு கொண்டு சென்றதாக பார்வையாளயர்கள் கூறினர். கருப்பு,வெள்ளை நிற புகைப்படங்களைஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

 

Exit mobile version