தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 2 ஆண்டுகளில் மேற்கொண்ட திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்பட காண்காட்சியை நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இப்புகைப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால்   செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், தற்போது தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த விளக்கங்கள், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மற்ற  திட்டங்கள் குறித்த விவரங்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.மேலும் புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்களுக்கு, தமிழக அரசின் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டன.

Exit mobile version