'திரௌபதி' படத்திற்கு தடை விதிக்க கோரி மனு

‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்கக்கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், ‘திரௌபதி’ படத்தை தடை செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் படத்தின் வசனங்கள் இடம்பெற்றிருப்பதால், திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

Exit mobile version