பரோட்டா வாங்கி சாப்பிட்ட நபர் உயிரிழப்பு!

சென்னை சர்மா நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சாலையோர கடையில் இருந்து புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன் சாப்பிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக்கிற்கு மட்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டார். கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டாக தெரிவித்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புரோட்டா சாப்பிட்ட பின் தரமற்ற குளிர்பானம் அருந்தியதால் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version