"நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல" – இளைஞர்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் அறிவுறுத்தல்

நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல என சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை விட படிப்பறிவில் குறைவாக இருக்கும் வட மாநிலங்களில் கூட நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது இல்லை, படிப்பறிவில் அதிகம் உள்ள தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதல்ல என்றார்.

கௌரவ கொலைகளை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

 

Exit mobile version