அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் மக்கள் புறக்கணிப்பார்கள் – அமைச்சர் காமராஜ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்ய பணத்திற்காக நடிப்பவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அரசின் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இலவசங்களை மக்கள் தான் வேண்டாம் என்று சொல்ல வேண்டுமே தவிர, பணத்திற்காகவும், புகழுக்காகவும் நடிப்பவர்களுக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்ய தகுதி இல்லை என்றும் அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டினார்.

Exit mobile version