இரவு நேரங்களில் சாவகாசமாக பெட்ரோல் திருடும் இளைஞர்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி!

பரமக்குடியில் இரவு நேரங்களில் நிகழும் பெட்ரோல் திருட்டை தடுக்கக்கோரி காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இரவு நேரங்களில் வீட்டு வாசல்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் சில நாட்களாக பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், காளிதாஸ் பள்ளிக்கூட தெருவில் இருச்சக்கர வாகனத்தில் இருந்து இளைஞர் ஒருவர் சாவகாசமாக தரையில் அமர்ந்து பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version