சொந்த செலவில் கால்வாயை சீரமைத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்வழிப் பாதைகளை தூர்வாரிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ சந்திர பிரபாவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, வாழங்குளம் கண்மாயில் இருந்து தண்ணீர் செல்லும் பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அந்த தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான சந்திரபிரபா முத்தையா, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், எம்.ஏல்.ஏ சந்திரபிரபாவை வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version