குமரியில் நடைபெற்ற பொருள் கண்காட்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட பொருள் கண்காட்சியை பார்வையிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்ததால் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பொருட்காட்சியில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக உயர்தர மற்றும் சிறுதர பயிர்கள், கனிகள், காய்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புகள் மற்றும் கலை அம்சங்கள் நிறைந்த பொருட்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் பிரமாண்ட ராட்டினங்களுடன் மரணக் கிணற்றில் வாகனம் ஓட்டும் சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளார்களை வெகுவாக கவர்ந்தது. இதில், தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Exit mobile version