பன்றிக் காய்ச்சலால் மக்கள் அச்சமடைய வேண்டாம் – அரியலூர் ஆட்சியர்

பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என, அரியலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 19 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கூறிய அவர், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version