கனடாவில் தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்

கனடா நாட்டின் வான்கூவர் தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வான்கூவர் தீவு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், 6 புள்ளி 6 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படாதநிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Exit mobile version