பகுதி நேர ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் 20 மாதங்கள் ஆகியும் தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என குற்றம் சாட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version