நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறும்

நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், காஷ்மீர் புல்வாமா தாக்குதல், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் போன்ற காரணங்களால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதனால், நாடாளுமன்ற தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, நாடாளுமன்ற தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலை நடத்த எந்த சிரமமும் இருக்காது என்று அவர் கூறினார்.

Exit mobile version