சந்தியாவின் கொலை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை

துணைநடிகை சந்தியாவின் கொலை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என அவரது பெற்றோர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, பள்ளிகரணை பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தியாவின் தலை மற்றும் மேல் பகுதியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், சந்தியா கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்தியாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக , கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேயை சந்தித்து கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.

Exit mobile version