2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலேயே குடிசைகள் இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் உருவாகும் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலேயே குடிசைகள் இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் உருவாகும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தம் பகுதியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், 2023 ஆம் ஆண்டிற்குள் தமிழகம் இந்தியாவிலேயே குடிசைகள் இல்லாத முதல் மாநிலமாக உருவாகும் எனத் தெரிவித்தார். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரனுக்கு வயிற்றில் புளியை கரைப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version