சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நாடார் சமூகம் பற்றி சர்ச்சைகுரிய தகவல்கள் நீக்கப்படும் – அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

சிபிஎஸ்சி 9ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில், நாடார் சமூகத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ஒரு எழுத்து கூட இல்லாத வகையில் நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார்.

சிபிஎஸ்சி 9ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நாடார் சமூகத்தை பற்றிய தவறான தகவல்களை நீக்க கோரி, நாடார் மக்கள் சக்தி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், நாடார் சமூகம் பற்றிய தவறான தகவல்களை சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து நீக்க முதலாவதாக குரல் கொடுத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக அரசு அதனை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன், ஒரு எழுத்துக் கூட நாடார் சமூகம் பற்றிய தவறான தகவல்கள் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

Exit mobile version