பிரிந்தவர்கள் திரும்பி வந்தால் இணைந்து செயல்படத் தயார் – தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

பிரிந்தவர்கள் திரும்பி வந்தால் இணைந்து செயல்படத் தயார் என்று, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சுரண்டையில், அதிமுக சார்பில் கட்சி கொடியேற்றும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டிற்குள் 39 அருங்காட்சியகங்கள் புணரமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது இடைத்தேர்தல் நடந்தாலும் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version