பழனி நடைபாதையை உடனடியாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்துள்ளதால், அதனை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக பழனி முருகன் கோவில் தைப்பூச விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்இந்நிலையில் பக்தர்கள் நடப்பதற்காக போடப்பட்ட பேவர்பிளாக் நடைபாதை சேதமடைந்தும், முட்புதர்களால் மூடப்பட்டும் காணப்படுகிறது. இதனால் நடைபாதையை பயன்படுத்தாமல் தார் சாலையை பயன்படுத்தும் பக்தர்கள் சாலை விபத்துகளில் சிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நடைபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version