வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பாக். துணை தூதர் ஆஜர்

அபி நந்தன் விவகாரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.

அபிநந்தனை கைது செய்துள்ளதாகவும், அதுகுறித்த சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையது ஹதர் ஷா விற்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அபி நந்தன் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version