ஷாருக் கானை பார்ப்பதற்காக எல்லை தாண்டிய பாகிஸ்தான் ரசிகர்

பாகிஸ்தானை சேர்ந்த அப்துல்லா என்பவர் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் தீவிர ரசிகராம். சிறுவயதிலிருந்து ஷாருக் கானின் தீவிர ரசிகரான அப்துல்லாவிற்கு அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக 2017ஆம் ஆண்டு, இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியான வாகா வழியாக அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்தார்.

அத்துமீறி நுழைந்த அவரை இந்திய ராணுவம் கைது செய்தது. மேலும், விசாரணையில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை பார்ப்பதற்காகவே அவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவரை நேற்று இந்திய அரசு விடுதலை செய்தது.

விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல்லா, மீண்டும் நான் இந்தியாவிற்கு வருவேன் என்றும், கண்டிப்பாக இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை பார்ப்பேன் என்றும் கூறினார்.

Exit mobile version