"புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்"- இம்ரான்கான்

2 இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இஸ்லமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்திய விமானப்படையைச் சேர்ந்த அபிநந்தன் என்பவரை கைது செய்துள்ளதாகவும், மற்றொருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், அவர் பற்றிய விபரம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். புல்வாமா தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவிற்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் இம்ரான்கான் அழைப்பு விடுத்தார்.

Exit mobile version