உத்தரகாண்டில் கடும் பனிப்பொழிவு – வெண்ணிறமாக காட்சி அளிக்கும் மலைகள்

உத்தரகாண்டில் பனிப்பொழிவு காரணமாக மலைகளில் பனிப்படர்ந்து வெண்ணிறமாக காட்சி அளிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பெருவாரியான பகுதிகளில் மழை பெய்தன. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், முன்சியாரி மலைகளிலும், மலை பாதையிலும் பனிப்படர்ந்து வெண்ணிறமாக காட்சி அளிக்கின்றன.

மேலும் சாலைகளில் படர்ந்து இருக்கும் பனியை அகற்றும் பணியில் அரசு ஊழியர்களுடன் பொதுமக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Exit mobile version