இந்திய குறும்படம் 'Period.end of Sentence'-க்கு Oscar விருது…

91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதினை, PERIOD END OF SENTENCE என்ற படம் பெற்றிருக்கிறது. ஈரானிய அமெரிக்கரான ரெய்க்கா செட்டாப்ச்சி படத்தின் இயக்குனர் ஆவார். இந்த படம் உருவானதற்கு காரணமானவர் கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் தான். அவர் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தியே படம் தயாரிக்கப்பட்டது.

அருணாச்சல முருகானந்தமும் இந்தப் படத்தில் நடத்திருக்கிறார். மாதவிடாய் காலத்தில் இந்திய பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பற்றி பேசும் படமாக PERIOD END OF SENTENCE திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version