News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

12 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணி

Web Team by Web Team
December 14, 2021
in Top10, TopNews, அரசியல், இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
12 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணி
Share on FacebookShare on Twitter

12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். இந்த விவகாரத்தில் நாட்டு மக்களின் குரல் நசுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 12ஆம் நாளான இன்று மாநிலங்களவை கூடியதும், 12 எம்.பி.க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்ற அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவதால் எதுவும் நடக்க போவதில்லை என தெரிவித்தார்.

எனவே, உறுப்பினர்கள் அனைவரும் அமைதிக் காக்க வேண்டும் என்றும் அவையின் கண்ணியத்தை அனைவரும் காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை முழக்கங்கள் எழுப்பியபடி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி தொடங்குவதற்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் நாட்டு மக்களின் குரல் நசுக்கப்படுவதாக சாடினார்.

மாநிலங்களவையில் எம்பிக்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்புவதற்கு கூட அனுமதி கொடுப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர் அமளிக்கு மத்தியில் விவாதமின்றி வரிசையாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையில்லை என்றும் ஜனநாயகத்தின் துரதிருஷ்டவசமான படுகொலை என்றும் தெரிவித்தார்.

Tags: bjpCongressIndianewsjOppositionPartiesParliamentParliamentaryoppositionpoliticsRajyaSabha
Previous Post

”வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு”

Next Post

தீயினால் வரையப்பட்ட ”கவிதை தீ” பாரதியாரின் ஓவியம்

Related Posts

குடியரசு தினவிழா அணிவகுப்பு!
இந்தியா

குடியரசு தினவிழா அணிவகுப்பு!

January 26, 2023
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!
தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!

January 26, 2023
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசுத் தின விழா கோலாகலம்: வாகனங்களின் அணிவகுப்பு !
இந்தியா

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசுத் தின விழா கோலாகலம்: வாகனங்களின் அணிவகுப்பு !

January 26, 2023
நாட்டின் 74வது குடியரசுதினம் இன்று!
இந்தியா

நாட்டின் 74வது குடியரசுதினம் இன்று!

January 26, 2023
கோவை டவுண்ஹாலில் தேசிய கொடி தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன!
இந்தியா

கோவை டவுண்ஹாலில் தேசிய கொடி தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன!

January 25, 2023
டெல்லியில் நிலஅதிர்வு!
இந்தியா

டெல்லியில் நிலஅதிர்வு!

January 24, 2023
Next Post
தீயினால் வரையப்பட்ட ”கவிதை தீ” பாரதியாரின் ஓவியம்

தீயினால் வரையப்பட்ட ”கவிதை தீ” பாரதியாரின் ஓவியம்

Discussion about this post

அண்மை செய்திகள்

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

January 27, 2023
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

January 27, 2023
விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

January 27, 2023
இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist