நகராட்சி அலுவலகத்துக்கு எதிரே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை- பெண்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு திறக்கப்பட உள்ள புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்கு எதிரே புதிதாக அரசு மதுபான திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மதுபான கடை அகற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றவும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version