மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு கால பூஜையையொட்டி இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலத்துக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன. தேவையான பொருட்கள் அனைத்தும், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடையை திறந்து தீபம் ஏற்ற உள்ளார். பின்னர், நடை இரவு 11 மணிக்கு அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

அப்போது, மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைக்க உள்ளார். மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி இளம் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version