கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

உதகை தாவரவியல் பூங்காவில் கோடை காலமலர் கண்காட்சிக்கான ஏற்பாட்டு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

உதகை தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மலர் கண்காட்சி நடைபெறும். இதில் பல்வேறு வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படும். இந்நிலையில், எதிர்வரும் கோடை சீசனுக்கு தாவரவியல் பூங்காவில், மலர் கன்றுகள் நடுவதற்கான மண், இயற்கை உரம் மற்றும் வேதி பொருட்கள் கலந்து, தொட்டிகளில் நிறப்பும் பணி நடைபெற்று வருகிறது. தோட்டக் கலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version