ஆங்கிலத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்படும் : அமைச்சர் பாண்டியராஜன்

சமஸ்கிருதத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் மாற்றப்படாது என்றும் ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட இருப்பதாகவும் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5 பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக 3 கோடி 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.

இந்த பூங்காக்களை ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான பாண்டியராஜன் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக, அமமுக இணைந்து செயல்பட்டால் வலிமை பன்மடங்காகும், பிரிந்து சென்றவர்கள் இணைவதற்காக அதிமுகவின் கதவு திறந்தே இருக்கும் என்றார். மேலும் மூவாயிரம் ஊரின் ஆங்கில பெயர்கள் தமிழில் மாற்றி அமைக்கபட உள்ளதாகவும், சமஸ்கிருத பெயர்கள் மாற்றி அமைக்கபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version