மார்பக புற்றுநோயை தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை அவசியம் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி ‘ஒன் வாக் ஒன் ஹோப்’ என்ற விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். புற்றுநோயை கண்டறிதல், தடுத்தல் மற்றும் சுய மார்பக பரிசோதனை பற்றிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு, பொதுமக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புற்றுநோய் குறித்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருவதாக கூறினார். பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version