பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் –  ராகுல்காந்தி கடிதம்

பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அரசியல் ரீயாக பல்வேறு காரியங்களை முன்னெடுத்து வருகிறார். மாநில வாரியாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை வலுபெற செய்யவும், மத்திய பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துறைக்கவும் வேண்டி பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். பெண்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைவருக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Exit mobile version