நாளை முதல் தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஆன் லைன் முறை

தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை பழகுநர், ஓட்டுநர் உரிமம் ஆர்.சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற சில சேவைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் பணம் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளை முதல் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்துதல், வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும் இணையதளம் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆன்லைனில் பணம் கட்டியதற்கான ஒப்புகை சீட்டுடன் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி சேவையை பெறலாம் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version