தமிழக அரசின் சார்பில் வீடு, கழிவறை கட்ட ஆணை : தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சிறுமி

கழிவறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் வீடு மற்றும் கழிப்பறை கட்டும் ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹனிபா என்ற சிறுமி கடந்த வாரத்திற்கு முன்பு கழிவறை கட்டி தராமல் இருந்த தனது தந்தை மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சிறுமியின் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய சார்பில் 2 லட்சத்து பத்தாயிரம் மதிப்பீட்டில் வீடு மற்றும் கழிவறை கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பத்திர பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழிவறை மற்றும் வீடு கட்டித்தர ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு சிறுமி நன்றி தெரிவித்தார்.

Exit mobile version