சமூக நலத்துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

பெரம்பலூரில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் MGR விளையாட்டு மைதானத்தில் சமூக நலத்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உள்பட தடகள போட்டிகளும், கபடி உள்ளிட்ட குழு போட்டிகளும் நடைபெற்றது. இதில், மண்டல அளவில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Exit mobile version