இன்னும் 100 நாட்கள்… ஜப்பானில் தொடங்கியது கவுன்ட்-டவுன்

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான 100 நாள் கவுன்டவுன் தொடங்கியதை அடுத்து ஒலிம்பிக் பொம்மைகள் திறக்கப்பட்டுள்ளன. ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கான 100 நாள் கவுன்டவுன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒலிம்பிக் பொம்மைகளை டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே((Yuriko Koike)) தொடங்கி வைத்தார். மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என யூரிகோ கோய்கே கூறினார்.

Exit mobile version