பொள்ளாச்சி அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் நவமலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்த மாகாளி என்ற முதியவரை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோன்று, தாயுடன் நடந்து சென்ற சிறுமி ரஞ்சனியை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version