ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்றார் முதலமைச்சர்

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ளார்.

மாலை திருப்பதி மலைக்கு சென்ற முதலமைச்சருக்கு, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி குப்புசாமி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ஆந்திர காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.

Exit mobile version