உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்தும் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில்குமார் ராமமூர்த்திக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தியுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் காலியிடங்கள் 15 ஆக குறைந்துள்ளது.

Exit mobile version